இந்தியா உலகில் ( இசையில் ) முதல் இடத்தில் இருக்கிறது . மற்ற நாடுகள் அதாவது ( அமெரிக்க , இங்கிலாந்த் , இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகள் ) இசையில் இந்தியாவை முந்த முடியாது .
இப்பொழுது இருக்கும் இந்தியா பழைய இந்தியா அல்ல . வெள்ளையர்களால் புதிதாக உருவாக்கி விட்டுசெல்லபட்ட அனாதை நாடு . இந்த மண் பல இசை மேதைகளும் அறிவிற் சிறந்த ஞானிகளும் தோன்றி மறைந்த மண் . இதில் வெள்ளையர்கள் கால் பட்ட உடனேயே அந்த சிறப்பு அம்சம் சிறிது சிறிதாக மறையதொடங்கியது .
அக்காலத்தில் த்யாகராஜர் , முத்துசுவாமி தீட்சிதர் , சதாசிவ ப்ரம்மேந்தர் போன்ற இசை மும்மூர்த்திகளும் பல இசை தெய்வங்களும் வளர்ந்து , வாழ்ந்து , இருந்து , மறைந்த மண் . அப்படிப்பட்டவர்கள் இயற்றிய பாடல்கள் இந்தியாவில் இன்னும் சில இடங்களில் மட்டுமே நீடித்து வருகின்றன . ஆனால் வெறும் 100 வருடங்களுக்கு முன்பு வந்து இந்தியாவை கைப்பற்றி அதனுடைய வளங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றவனான அந்த ஆங்கிலேயன் கொண்டு வந்த அந்த பாட்டுகள் , இப்பொழுது jazz , beat , rock , பின் வேறு பல இசைகளும் இப்பொழுது மனிதனின் மனங்களை ஆட்கொண்டு விட்டன .
இப்பொழுது இந்தியா இசையில் சிறந்து விளங்கு வதற்கு காரணமே கர்நாடக இசை மட்டுமே . அதுவும் இப்பொழுது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது .
ஆனால் இன்னும் சில இடங்களில் இசை ( கர்நாடகம் ) சிறந்து விளங்குகிறது . இன்னும் முழுதாக அழியவில்லை . பல இசை மேதைகள் அதை சாதித்து வருகிறார்கள் .
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இது ஒரு மகா மேதை எழுதிய ஒரு திரு வாக்கு . அது மெய் . இன்னும் காலம் கெடவில்லை , இசையை மேலோங்கவும் இந்தியாவின் மானத்தை பாதுகாக்கவும் எல்லோரும் முன்வருவோம் . இளைஞர்கள் எதிர்காலத்தின் தூண்கள் . அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் . எல்லோரும் கைக்கோர்த்து நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் .
ஜெய் ஹிந்த் !
No comments:
Post a Comment