Friday, September 16, 2011

தெய்வத் திருமந்திரம்

           
                    வித்யா நிகேதன் பள்ளியில்  பாட்டு  போட்டிநடக்கப்போகிறது  . நான் அதற்கு தயார் நிலையில் இல்லவே இல்லை . வீட்டில் நான் முதற் பரிசு பெறுவேன் என்று ஆவலுடன் அனுப்பி வைத்தார்கள் . பெயர் வந்தவுடன் எழுந்துரிக்க வேண்டுமே என்று உடம்பு நடுங்க உட்கார்ந்து கொண்டிருந்தேன் . சுமார் பத்து பேர் பாடி முடிததுக்கு அப்புறமும் என் பெயர் வரவில்லையே என்று என்று ஏக்கத்துடன் எழுந்து போர்டில் சென்று பார்த்தேன் . ஒன்று , இரண்டு ... இருபது , ஆ !!!! இதோ வந்துவிட்டது .
அமுதன் ... இன்னும் ஆறு பேர் போக வேண்டுமா !!!!! முனங்கிக்கொண்டே வந்து  உட்கார்ந்து பார்த்தேன் . இருபது நிமிடங்களுக்கு பிறகு என் பெயர் வந்தது . உடனே எழுந்து அந்த முருகனை வேண்டி கொண்டே மேடை ஏறி சென்றேன் .
பின்பு ஒரும் முறை அனைவரையும் பார்த்த பிறகு முருகா என்று மைக்கில் கூறிவிட்டு "முத்தை தரு பத்தித் திருநகை ....... பெருமாளே"!!!!! என்று முடித்தேன் . எப்படி பாடினேன் என்று எனக்கு தெரியும் . நாடாவில் அபஸ்வரம் வந்து வார்த்தைகளை மாத்தி கூறி சொதப்பினேன் . பின்பு இரண்டு பேர் பாடினர் .
போட்டி முடிந்து விட்டது என்று கூறினார் . ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிசுகள் தரப்படும் என்று கூறினார் .

                    நான் என்னுடைய பள்ளி மூலமாக இந்த போட்டிக்கு வந்திருந்தேன் . சென்று பள்ளி ஆசிரியரிடம் " மிஸ் , பரிசு யாருக்கென்று தெரியவில்லை . ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் தருவார்களாம் " என்றேன் . அவரும் சரி  வா  சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றார் . நான் " இல்லை மிஸ் , நீங்க போய் சாப்டுட்டு வாங்க . எனக்கு பசியில்லை ". அவர் சென்றுவிட்டார் . நான் பாடின அறைக்கு சென்றேன் . அங்கு யார் யார் நன்றாக பாடுவோர் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர் . நான் சென்று நான் பாடலாமா என்று கேட்டேன் . அவர்கள் சிறிது யோசித்த பிறகு ஒப்புக்கொண்டனர் . நான் சென்றி மேடை ஏறினேன் . முருகனை இப்பொழுதாவது என்னை காப்பார்ற்றும் படி வேண்டினேன் . சென்று அபிராமி அந்தாதியின் பாட்டினை பாடினேன் . கலையாத கல்வியும் என்று ஆரம்பித்து ஜோராக முடித்தேன் . எல்லோரும் மனமார பாராட்டி கை தட்டினர் . பிறகு பெருமிதத்துடன் சென்றேன் . சென்ற இடம் பல  ஆசிரியர்கள்  உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் . என்னை பார்த்ததும் எழுந்து வந்து என்னை திரும்பவும் பாடச் சொன்னனர் . நான் பாடினேன் . பிறகு அதே மாதிரி அந்த பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் இரண்டு மூன்று முறை என்னை என்னை பாட வைத்தனர் . 

                   நான் மிகவும் களைப்படைந்து விட்டேன் . பத்து நிமிடங்களில் பரிசை குடுப்பர் . எப்படியும் எனக்கு கிடைக்காது என்று சென்று அங்கே உட்கார்ந்து சிறிது கண்ணை மூடினேன் . சில நொடிகளில் களைப்பினால் கண்ணயர்ந்தேன் . என் ஆசிரியர் வந்து என்னை எழுப்பினார் . " அமுதா .... எழுந்திரு " என்று கத்தினார் . நானும் அடித்துப் போட்டது போல் எழுந்தேன் . எல்லோரும் என்னை இன் முகத்துடன் நோக்கினர் . அப்பொழுதுதான்   மைக்குக்கு முன்னால் நின்று பரிசு கூற ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தது . திடிரென்று என்னுடைய பெயரை அவர்கள் கூப்பிட்டவடன் எனக்கு அப்படியே புல்லரித்தது . அப்படியே அதே புல்லரிப்புடன் சென்றேன் . இதில்  எனக்கு முதற் பரிசு வேறு . அப்படியே முருகனை நினைத்து " முருகா , என்னை காப்பாற்று என்றேன் , எனக்கு இவ்வளவு பெரிய அறிய பரிசை குதிருக்கிறாய் , இதற்க்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன் " . கண்ணீர் மல்க பரிசை வாங்கி கொண்டேன் .

1 comment:

  1. anaivarukkum ennudaiya vanakkangal .... intha kadhai nanraaga irukkiradhaa endru neengal thaan koora vendum ..... ingu ezhuthi podalaam

    ReplyDelete